×

கோவளத்தில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் பலி

திருப்போரூர்: திருவள்ளூர் ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (55). இவரது மகன் ஸ்ரீசபரீஷ் (18), திருப்போரூரில் உள்ள எஸ்.எஸ்.என் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன் பள்ளியில் ஒன்றாக படித்த நண்பரின் சகோதரி திருமணம் நேற்று சென்னை பட்டினப்பாக்கத்தில் நடந்தது. இதில் அனைத்து நண்பர்களும் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்ததும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்திற்கு ஜாலியாக பொழுதை கழிக்க பைக்குகளில் சுற்றுலா வந்தனர்.

கோவளத்தில் உள்ள புளூ பீச் பகுதியில் ஸ்ரீசபரீஷ் உள்ளிட்ட 11 பேர் கடலில் குளித்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி 5 பேர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். இதை பார்த்ததும் கரையில் இருந்த சக நண்பர்கள்சத்தம் போட்டனர். உடனே பொதுமக்களும் மீனவர்களும் சேர்ந்து 3 பேரை மீட்டனர். 2 பேர் அலையில் சிக்கி மாயமாகினர். மேலும் தகவலறிந்து தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்ட

னர்.இந்நிலையில் இரவில் 2 பேரின் சடலங்களும் கானத்தூர் அடுத்த கரிக்காட்டுக்குப்பம் பகுதியில் கரை ஒதுங்கியது. தகவலறிந்து கானத்தூர் போலீசார் விரைந்து சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், இறந்தவர்கள் ஸ்ரீசபரீஷ் மற்றும் தாம்பரத்தை அடுத்த முடிச்சூரை சேர்ந்த வெங்கடசாமி என்பவரின் மகன் வெங்கடசாய் விக்னேஷ் (19) என்பதும், இவர், சென்னை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

The post கோவளத்தில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Giant wave ,Kolam ,Tirupporur ,Subramani ,Rajajipuram ,Thiruvallur ,Srizabarish ,
× RELATED தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை...